உமது அடிச்சுவட்டை பின்பற்றி நான் நடப்பேன்

இறைவா, உமது அடிச்சுவட்டை பின்பற்றி நான் நடப்பேன்! 
- வஷ்னீ...!!

தீயவனின் வலை க-வலை!


தீயவனின் வலை
க-வலைதான்!

         அறுத்தெறிவாய்
         அவ்-வலையை!



விலைமதிக்க முடியாத காதல்

ஆற்றில் 
மூழ்கியவனுக்கு 
ஒரு சொட்டு 
தண்ணீரின் மதிப்பு தெரியாது
தாகத்தினால் வாடுபவனே 
அதன் மதிப்பை அறிவான்

பேக்கரி 
உரிமையாளருக்கு 
ஒரு ரொட்டி துண்டின் 
அருமை தெரியாது
பசியினால் வாடுபவனே 
அதன் அருமையை அறிவான்

அவ்வாறே
கற்சிலைகளுக்கும் உருவங்களுக்கும் 
மெய்க் காதலின் 
பெறுமதி தெரியாது
மனிததன்மையுள்ள உள்ளத்திற்கே 
காதல் 
விலைமதிக்க முடியாத ஒன்றாகத் 
தென்படும்.

இறைவன் கொடுத்த வரம்

வாழ்க்கை

எனது வாழ்க்கை

இறைவன் கொடுத்த வரம்

நான் கேட்டுப் பெற்றதல்ல.

நானாகவே பெற்றுக்கொண்ட வரம்.

நான் விரும்பிய முடிவை

அவனாகவே கொடுப்பான்.

அதையும் ஏற்றுக்கொண்டு

என் வழியே நான் செல்வேன்.

இதுதான் வாழ்க்கை

என்பதைப் புரிந்துகொண்டேன்.


நீ + நான் + கடவுள்!

நீ + நான் + கடவுள்!



இவ்வுலக இன்பத்தைக் குறித்து நான் சிந்தித்தேன்.
இந்த உலகத்தின் எல்லைவரை
நீயும் நானும் மட்டும் சந்தோஷமாக இருப்பதே இன்பம்
என்றே எண்ணினேன்.

என்றாலும் இறைவனுடைய கண்களுக்கு முன்பாக
நாம் வெறும் தம்பட்டமாடும் நடன கலைஞர்களே
என்றே உணர்ந்தேன் என் நண்பரே.

இரண்டுபேராக சேர்ந்து நடனமாடி அதில்
இன்பம் காண்பதில் தவறேதுமில்லைதான்.எனினும் அத்துடன்
ஒரு இசை நாதம் இல்லையென்றால்,
அது வெறும் பொம்மலாட்ட நிகழ்வாகவே அமையும்
என் அன்பு ஆருயிர் நண்பரே.

சற்று நாம் அமைதியாக இருந்து, முத்தமிட்டு
ஒருவரை ஒருவர் வழிநடத்தி, கட்டிப்பிடித்து,
இருவரும் இணைந்து இனிய இசையுடன் ஒன்றித்து,
ஒருவரையொருவர் தாங்கி, கைத்தூக்கி
நடனமாடுவதைவிட சிறப்பு வேறில்லை இவ்வுலகில்என்பதும் உண்மைதான் நண்பரே.

ஆம், இரு உடல்கள் ஓருடலாகி, கணவன் மனைவியாக
ஒரு இன்னிசையுடன் சங்கமிக்கும்போது அதிலொரு
ஆர்வமும் ஒருவரிலொருவர் கவர்ச்சியும்
அன்பும் பாசமும் இன்பம் நுகர்வும் தன்னிலே ஏற்படுமே
இது சிற்றின்பம் தானே என் நண்பரே.
சரி, இனி தானும் நாம் இவ்வுலக
சிருஷ்டிகரைக் குறித்துச் சற்றேனும் சிந்திப்போமா.
இந்த உலகத்தின் கடைசி எல்லைவரை
நீ + நான் + கடவுள்!
நாம் சந்தோஷமாக இருக்கலாம்.
ஆம், இது உண்மைதான். இவ்வாறான
இந்த முப்புரி நூல் சீக்கிரம் அறாது அன்றோ.

ஆம், நான் அந்த மூன்றாவது நபரான
இவ்வுலகைப் படைத்த கதாநாயகனான
சர்வ வல்ல கடவுளை உன்னுடனும் என்னுடனும்
சேர்ந்துகொள்வதையே விரும்புகின்றேன்.

அப்போது தானே என்றும் மாறாத நித்திய பேரின்பம்எம்முன்னே நிகழுமன்றோ என் நண்பரே!

 இ. இ. வஷ்னீ 

ஒரு போர் வீரனுக்கு அழகு அவனது ஆயுதம் தான்!

...._ _|\_________________,,_
.../ `--|||||||||-------------------_] ../_==o ____!!----------------|
....),--.(_(__) /
....// (\) ),---/
...//__//
..//__ /

ஒரு போர் வீரனுக்கு அழகு 
அவனது ஆயுதம் தான்! 

ஆயுதம் இல்லாத வீரன் வீரனேயல்ல. 
அவனது வீரத்துவத்திற்கு 
அவனிடமிருக்கும் 
ஆயுதமே 
பெலத்தைத் தருகின்றது. 
கெளரவத்தைத் தருகின்றது. 
ஆக மொத்தத்தில் 
ஒரு போர்வீரனுடைய அழகு 
அவனது ஆயுதமே....!!!

என்னுடைய ஆயுதம் துப்பாக்கி அல்ல... 
பரிசுத்த வேதாகமம் 
அதுவே 
எனக்குப் பாதுகாப்பைத் தருகின்றது. 
எனது எதிரிக்கு பயத்தை ஏற்படுத்துகின்றது... 
இது எப்படி என 
என் இனிய கிறிஸ்தவ நண்பர்களுக்கு 
நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..... ! 

என்னுடைய ஆயுதம் பரிசுத்த வேதாகமம் ஒன்றே! 
சரி, இப்போ நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்?



கவிதை

ஒரு சிறிய கவிதை

சொல்லத்தான் வேண்டுமென்று

மனசு துடிக்கின்றது.

அந்த சிறிய கவிதை

மூன்று வார்த்தையில் 

கூறிவிட முடியாது.

ஆனாலும் அதை நான்கு

வார்த்தையில் வடிக்கின்றேன்.

எனது சிறிய கவிதை

இதுதான் எப்போதும்

ஐ லவ் ய++


MY WEDDING INVITATION 4 U....



LIGHT


LIFE POST


TRUTH



RESERACTION


LIFE DEDICATION