நீ + நான் + கடவுள்!

நீ + நான் + கடவுள்!



இவ்வுலக இன்பத்தைக் குறித்து நான் சிந்தித்தேன்.
இந்த உலகத்தின் எல்லைவரை
நீயும் நானும் மட்டும் சந்தோஷமாக இருப்பதே இன்பம்
என்றே எண்ணினேன்.

என்றாலும் இறைவனுடைய கண்களுக்கு முன்பாக
நாம் வெறும் தம்பட்டமாடும் நடன கலைஞர்களே
என்றே உணர்ந்தேன் என் நண்பரே.

இரண்டுபேராக சேர்ந்து நடனமாடி அதில்
இன்பம் காண்பதில் தவறேதுமில்லைதான்.எனினும் அத்துடன்
ஒரு இசை நாதம் இல்லையென்றால்,
அது வெறும் பொம்மலாட்ட நிகழ்வாகவே அமையும்
என் அன்பு ஆருயிர் நண்பரே.

சற்று நாம் அமைதியாக இருந்து, முத்தமிட்டு
ஒருவரை ஒருவர் வழிநடத்தி, கட்டிப்பிடித்து,
இருவரும் இணைந்து இனிய இசையுடன் ஒன்றித்து,
ஒருவரையொருவர் தாங்கி, கைத்தூக்கி
நடனமாடுவதைவிட சிறப்பு வேறில்லை இவ்வுலகில்என்பதும் உண்மைதான் நண்பரே.

ஆம், இரு உடல்கள் ஓருடலாகி, கணவன் மனைவியாக
ஒரு இன்னிசையுடன் சங்கமிக்கும்போது அதிலொரு
ஆர்வமும் ஒருவரிலொருவர் கவர்ச்சியும்
அன்பும் பாசமும் இன்பம் நுகர்வும் தன்னிலே ஏற்படுமே
இது சிற்றின்பம் தானே என் நண்பரே.
சரி, இனி தானும் நாம் இவ்வுலக
சிருஷ்டிகரைக் குறித்துச் சற்றேனும் சிந்திப்போமா.
இந்த உலகத்தின் கடைசி எல்லைவரை
நீ + நான் + கடவுள்!
நாம் சந்தோஷமாக இருக்கலாம்.
ஆம், இது உண்மைதான். இவ்வாறான
இந்த முப்புரி நூல் சீக்கிரம் அறாது அன்றோ.

ஆம், நான் அந்த மூன்றாவது நபரான
இவ்வுலகைப் படைத்த கதாநாயகனான
சர்வ வல்ல கடவுளை உன்னுடனும் என்னுடனும்
சேர்ந்துகொள்வதையே விரும்புகின்றேன்.

அப்போது தானே என்றும் மாறாத நித்திய பேரின்பம்எம்முன்னே நிகழுமன்றோ என் நண்பரே!

 இ. இ. வஷ்னீ