விலைமதிக்க முடியாத காதல்

ஆற்றில் 
மூழ்கியவனுக்கு 
ஒரு சொட்டு 
தண்ணீரின் மதிப்பு தெரியாது
தாகத்தினால் வாடுபவனே 
அதன் மதிப்பை அறிவான்

பேக்கரி 
உரிமையாளருக்கு 
ஒரு ரொட்டி துண்டின் 
அருமை தெரியாது
பசியினால் வாடுபவனே 
அதன் அருமையை அறிவான்

அவ்வாறே
கற்சிலைகளுக்கும் உருவங்களுக்கும் 
மெய்க் காதலின் 
பெறுமதி தெரியாது
மனிததன்மையுள்ள உள்ளத்திற்கே 
காதல் 
விலைமதிக்க முடியாத ஒன்றாகத் 
தென்படும்.